Search This Blog

Friday, March 25, 2011

kanavu karaisal

நிறமற்ற கவலைகளுக்கு
கவிதை சாயம் பூசுகையில்
வெறுமனே வெறித்துக்கொண்டிருக்கும் 
நடுசாம வேளைகளோடு
கனவுகள் பின்னிகொள்ள
கற்றுணர்ந்த நிகழ்வுகளை
வெள்ளையாய் ஓர் விட்டுகொடுத்தலில்
கேட்பாரற்ற மகிழ்ச்சி  பகிர்தலில்
எதிர்பார்ப்பில்லா ஆச்சர்யங்களில்
மனம் கரையும் அதிர்வுகளில்
உண்மையாய் உணரும்போது
கனவுகள் ரொம்பவும் பிடித்து போகிறது
கவிதைகளை விடவும் !!!

minsaaramilla iravu

மின்சாரமில்லா மழை நேர இரவில்
மௌனங்கள் ஓங்கி ஒலித்துகொண்டிருக்க
அரவமில்லா இருட்டில்
மரணங்களின் சாயப் பூச்சு
மங்கலாய் அலறிகொண்டிருக்கும்..
காற்றில் அலையும் ஆன்மாக்களோ , ஆவிகளோ 
அழைக்கும் சத்தம் கேட்குமென
 வாய் பொத்தி மூச்சடக்கி காத்திருப்பான் 
மனித உலகம் வெறுத்த ஒருவன் !!! 

kavithaiyum kaadhalum

kavithaiyum kaadhalum
epporul nokkinum
neeyendre amaivathin
artham ariyaamal
thavikiren naan!!!