நிறமற்ற கவலைகளுக்கு
கவிதை சாயம் பூசுகையில்
வெறுமனே வெறித்துக்கொண்டிருக்கும்
நடுசாம வேளைகளோடு
கனவுகள் பின்னிகொள்ள
கற்றுணர்ந்த நிகழ்வுகளை
வெள்ளையாய் ஓர் விட்டுகொடுத்தலில்
கேட்பாரற்ற மகிழ்ச்சி பகிர்தலில்
எதிர்பார்ப்பில்லா ஆச்சர்யங்களில்
மனம் கரையும் அதிர்வுகளில்
உண்மையாய் உணரும்போது
கனவுகள் ரொம்பவும் பிடித்து போகிறது
கவிதைகளை விடவும் !!!