திரும்பி ஒருமுறை பார்க்க இயலாமல்
நீ நகர்ந்து செல்லும் நேரங்களில்
பிரிவின் ரணம் தாங்க மாட்டாமல்
உனதன்பை மனம் உணரும் தருணங்களில்
முதல் முத்த ஸ்பரிசங்களால்
நகராமல் நின்ற இரவுப்பொழுது
மனதை மழுங்கச் செய்துவிடுகிறது. . .
உயிரின் வீரியம் காற்றில் கரைந்து
தொடரும் முற்று புள்ளி நிலவுகளாய்
விழி நீர்துளியாய் தெறித்து நிற்க
காத்திருப்பின் கனம் கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை மெதுவாய் உணர்வாய் நீ ! ! !
காத்திருப்பின் கனம் கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை மெதுவாய் உணர்வாய் நீ ! ! !
yor wordZ MAkEZ UZ Listenin.........Keep GOIN .... :)
ReplyDeletethankyou :) i guess itz hari.. thanks re
ReplyDelete:D
ReplyDelete