முன்பின்னென
பொழுதுகள் கரைந்து கிழிந்துகொண்டிருக்க
மெல்லிய ஜவ்வாய்
மனப்படலங்கள் கிழிந்துகொண்டிருக்க
எலும்பை எரித்து உயிரை உருக்கி
குளிர்காயும் இவனை கொண்டுசெல்ல
எமன் வரும் நாளை
எதிர்நோக்கி எதிர்நோக்கி
காத்திருப்பதிலே
கழிகிறது என் நாட்கள். . .
படலங்கள் பிரியுமுன் வராவிடில்
மரணம் என்னை அணைத்திருக்கும். . .
எங்கனம் நோக்கினும்
வேண்டுவதோர் விடுதலையே ! ! !
No comments:
Post a Comment